முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு,ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகளை இந்திய ராணுவப்படை சுட்டு வீழ்த்தியது. இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவரும் வீர மரணமடைந்தார்.

சீர்குலைக்க ...பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுப்பதும், அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின் இதுபோன்ற அடாவடி செயல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குபுவாரா மாவட்டம் தாங்தார் செக்டாரில் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நேற்று முன்தினம் இரவு நுழைய முயன்றனர். அவர்களை இந்திய பாதுகாப்பு படை தடுத்து நிறுத்தியது.

ராணுவ வீரர்...இருதரப்பு இடையே துப்பாக்கி சண்டை தொடங்கியது. அதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்றும் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சண்டையில் இந்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு தேடுதல் வேட்டை தொடர்கிறது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து