எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாய்,ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஷிகர் தவான், ரோகித் சர்மா சதம் அடித்தனர். இந்த வெற்றி மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்தது.
மீண்டும் மோதல்....14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் சோகைல், உஸ்மான் கான் ஆகியோருக்கு பதிலாக முகமது அமிர், ஷதப்கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
பாக். பேட்டிங் தேர்வு.....‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஆகியோர் களம் இறங்கினார்கள். புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்களது வேகப்பந்து வீச்சு தாக்குதலை நேர்த்தியாக தொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடித்து ஆட சிரமப்பட்டனர்.
ரோகித் சர்மா அப்பீல்........8-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச அழைக்கப்பட்டார். அதற்கு உடனடியாக நல்ல பலன் கிடைத்தது. அவரது அந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல்-ஹக் (10 ரன், 20 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் நடுவர் எல்.பி.டபிள்யூ. கொடுக்க மறுத்ததால் நடுவரின் முடிவை எதிர்த்து கேப்டன் ரோகித் சர்மா அப்பீல் செய்தார். இதில் இந்திய அணியின் அப்பீல் வெற்றியில் முடிந்தது. இமாம் உல்-ஹக் அவுட் என்று அறிவிக்கப்பட்டு வெளியேறினார்.
குல்தீப் யாதவ்............அடுத்து பாபர் அசாம் களம் இறங்கினார். 13-வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் பஹார் ஜமான் முதல் சிக்சரை பறக்கவிட்டு அசத்தினார். ஆனால் குல்தீப் யாதவின் அடுத்த ஓவரில் பஹார் ஜமான் (31 ரன்கள், 44 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்) முன்னால் இறங்கி தரையில் முட்டி போட்ட நிலையில் பந்தை அடிக்க முற்பட்டு நிலை தடுமாறி விழுந்ததுடன் எ.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டையும் இழந்து நடையை கட்டினார்.
பாக். தடுமாற்றம்.....இதைத்தொடர்ந்து கேப்டன் சர்ப்ராஸ் அகமது, பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்தார். ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஒரு ரன் எடுப்பதற்கு ஓட முயற்சித்த சர்ப்ராஸ் அகமது, திடீரென எதிர்முனையில் இருந்த பாபர் அசாமை திரும்பி விடும்படி சைகை செய்தார். ஆனால் அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கொண்ட யுஸ்வேந்திர சாஹல் துரிதமாக செயல்பட்டு பாபர் அசாமை (9 ரன்) ரன்-அவுட் செய்தார். அப்போது பாகிஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்து தடுமாறியது.
சோயிப் மாலிக்...இதனை அடுத்து சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமதுவுடன் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பாகிஸ்தான் அணி 27.1 ஓவர்களில் 100 ரன்னை எட்டியது. அடித்து ஆடிய சோயிப் மாலிக் 64 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதத்தை கடந்தார். இந்த போட்டி தொடரில் சோயிப் மாலிக் அடித்த 2-வது அரைசதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 38.5 ஓவர்களில் 165 ரன்னாக உயர்ந்த போது சர்ப்ராஸ் அகமது (44 ரன்கள், 66 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு சர்ப்ராஸ் அகமது-சோயிப் மாலிக் ஜோடி 107 ரன்கள் திரட்டியது.
237 ரன்கள்...அடுத்து ஆசிப் அலி, சோயிப் மாலிக்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினார்கள். 42-வது ஓவரில் புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் ஆசிப் அலி 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். சோயிப் மாலிக் ஒரு பவுண்டரி விரட்டினார். அந்த ஓவரில் மட்டும் 22 ரன்களை புவனேஷ்வர்குமார் விட்டுக்கொடுத்தார். 43.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 200 ரன்களை கடந்தது. நிலைத்து நின்று ஆடிய சோயிப் மாலிக் 90 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆடிய ஆசிப் அலி (30 ரன்கள், 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சிலும், ஷதப் கான் (10 ரன்) ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சிலும் அடுத்தடுத்து கிளன் போல்டு ஆகி ஆட்டம் இழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. முகமது நவாஸ் 15 ரன்னுடனும், ஹசன் அலி 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
238 ரன்கள் இலக்கு...பின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 15-வது சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 100 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். இந்த போட்டி தொடரில் அவர் அடித்த 2-வது சதம் இதுவாகும். கேப்டன் ரோகித் சர்மா 111 ரன்னுடனும் (119 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன்), அம்பத்தி ராயுடு 12 ரன்னுடனும் (18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) களத்தில் இருந்தனர். 19-வது சதத்தை பூர்த்தி செய்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களையும் கடந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 2 இந்திய வீரர்கள் சதம் அடிப்பது இது 3-வது நிகழ்வாகும். ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இறுதிப்போட்டிக்கு...சூப்பர்-4 சுற்றில் தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்த இந்திய அணி ஏறக்குறைய இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான் அணியை மீண்டும் வீழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று இருந்தது. போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இந்திய அணி தனது கடைசி ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு