முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களையும் விட்டு வைக்காத மீடூ : அர்ஜூனா ரணதுங்கா - மலிங்கா மீது பாலியல் புகார்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : கிரிக்கெட் விளையாட்டு வீரர்களையும் விட்டு வைக்காத மீடூ. முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜூனா ரணதுங்கா மீது இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார்.

நடிகைகள் புகார்

அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த மீடூ  இந்தியாவில் பாலிவுட்டை மையம் கொண்டது.  தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது. இந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா நடிகர்  நானா படேகர்  தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுதினார். இதையடுத்து தற்போது இந்தியாவில் மீடூ வைரலாகி உள்ளது.  இதை தொடர்ந்து பாலிவுட் அப்பா நடிகர் ஆலோக் நாத் மீது பல நடிகைகள் புகார் கூறினர். பத்திரிகையாளர்களும் இதில் விலக்கல்ல.  பத்திரிகையாளராக இருந்து மத்திய மந்திரியாக உள்ள  எம்.ஜே.  அக்பர்  மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.

முன்னாள் வீரர்...

தமிழகத்தில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது  குற்றம் சாட்டினார். அதற்கு அவரும்  விளக்கம் அளித்து உள்ளார்.  இந்த நிலையில்  இலங்கை  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய இலங்கை  அமைச்சருமான  அர்ஜூனா ரணதுங்கா மீது  பாலியல்  குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. 1996ஆம் ஆண்டு இலங்கை  உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர்  ரணதுங்கா.  இவர் 296 ஒருநாள் போட்டிகள் மற்றும் 93 டெஸ்ட் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடி உள்ளார்.

பாலியல் தொல்லை

இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் புதன்கிழமை பேஸ்புக்கில்,  தன்னை இந்திய ஓட்டலில் நீச்சல் குளம் அருகே ரணதுங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி உள்ளார். ஒட்டலின் நீச்சல் குளம் அருகே நடந்து சென்ற போது ரணதுங்கா என் இடுப்பை பிடித்து கொண்டு இழுத்து, என் மார்பின் பக்கமாக கைகளை நெகிழ்ந்து, மிக மோசமான  செய்கைகளை செய்தார். கால்களில் உதைத்து ஓடினேன். அவர் பாஸ்போர்ட் ரத்து செய்யபடும் மற்றும்  போலீசாரிடம் தெரிவிப்பேன் என அச்சுறுத்தினார். நான் வரவேற்பறை  சென்று இது குறித்து ஒட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்தேன். இருந்தாலும் இது உங்கள் தனிப்பட்ட விஷயம் என்று கூறி விட்டனர் என கூறி உள்ளார்.

லசித் மலிங்கா...

தமிழகத்தில் பாலியல் ரீதியாக  துன்புறுத்தல் குறித்து பதிவிட்டு வரும் பாடகி சின்மயி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.  இந்திய பிரிமீயர் லீக்  சீசனின் போது  மும்பையில் உள்ள ஓட்டல் அறையில் ஒரு பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறி உள்ளார்.  அது கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா என்று சின்மயி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து