முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிட்லி புயல் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: பிரதமர்

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டிட்லி புயல் தாக்கியதால், ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 8 பேர் உயிரிழந்த நிலையில், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசா-வின் கோபால்பூர் அருகே நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால், ஒடிசா மாநிலத்தில் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. கஜபதி மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் மின்கம்பங்கள், மரங்கள் விழுந்து சேதமடைந்தன. 6 நகரங்கள் மற்றும் 4,319 கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா-சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 13 குழுக்கள், ஒடிசா பேரிடர் மீட்புக் குழுக்கள் ஆகியவை ஈடுபட்டுள்ளன. இதேபோல, ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஸ்ரீகாக்குளம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 67 பேரில் 65 பேர் கரை திரும்பியுள்ளதாகவும், 2 பேர் காணாமல் போயுள்ளதாகவும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை சந்திரபாபு நாயுடு நேற்று பார்வையிட்டார்.

இந்நிலையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து