முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் முதல்வர் - நீ துணை முதல்வர் :மு.க.ஸ்டாலின் - தினகரன் ரகசிய ஒப்பந்தம் அம்பலப்படுத்துகிறார் அமைச்சர் ஜெயகுமார்

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,நான் முதல்வர், நீ துணை முதல்வர் என்று மு.க.ஸ்டாலின் - தினகரன் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-வன்முறைக்கு வன்முறை எப்போதும் தீர்வாகாது. நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்கள், அண்ணா சொன்ன கடமை, கண்ணியம் கட்டுபாடு தான், எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி. ஜெயலலிதா காலத்திலும் சரி எங்களது தாரக மந்திரம், தேவர் திருமகன் பிறந்தநாளில் டி.டி.வி.தினகரன் ஆட்கள் பேனர்களை கிழித்தெறிந்து வன்முறையில் ஈடுபட்டது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு நடத்திய வன்முறை ஏற்கமுடியாது. இதற்கு வீடியோ பதிவு ஆதாரங்கள் இருக்கின்றன. யார் யார் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது. அதனை ஆதாரமாக கொண்டு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்கு இடம் இல்லை. சி.சி.டி.வி.ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு தான் சட்டம் தனது கடமையை செய்தது.

தயார்நிலையில் அரசு.....நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்னையை பொறுத்தவரை அது சபாநாயகர் மேற்கொள்ள வேண்டிய முடிவு. இதில் அரசு பங்கு எதுவும் இல்லை. நாளை (இன்று) அ.தி.மு.க. கூட்டம் பற்றி கேட்கிறீர்கள். ஒரு அரசியல் கட்சி கூட்டம் நடத்துவது அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று, இதில் அனுமானத்திற்கு இடமில்லை. கூட்டம் நடத்துவதற்கும், இதற்கும் சம்பந்தமுமில்லை.

சந்தித்தது உண்மை...மு.க.ஸ்டாலின் - டி.டி.வி தினகரன் சந்தித்து ஒப்பந்தம் செய்திருப்பது குறித்து ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகின்றேன். நான் தான் சி.எம்., நீ துணை முதல்வர் என்று இருவரும் ரகசிய ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினும்-தினகரனும் சந்தித்தது உண்மை. அவர்கள் மேற்கொண்ட 15 விஷங்களில் எழுதப்படாத ஒப்பந்தம் நடத்தியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் விநியோகம் நடந்திருக்கிறது. 20 தொகுதி இடைத்தேர்தலில் 10 ரூபாய்க்கு டோக்கன் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஏமாந்தது மாதிரி இனி எந்த தொகுதி மக்களும் ஏமாற மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து