முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்ஸ் விமானத்தில் வீறிட்டழுத 9 மாதக் குழந்தைக்கு தாய்மை பொங்க பாலூட்டிய பணிப்பெண்

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

மணிலா,விமானத்தில் தன் குழந்தைக்கு கொண்டு வந்த பால் தீர்ந்து விட்டதால் அழுத குழந்தையை வைத்து கொண்டு அல்லாடிய போது விமான பணிப்பெண் ஒருவர் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிலிப்பின்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணாக பேட்ரீஷா ஆர்கானோ (24) இருந்தார். அப்போது அவர் அந்த விமானத்தில் குழந்தை அழும் சப்தத்தை கேட்டார். 9 மாத குழந்தையின் தாயான ஆர்கானோவுக்கு குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் பதற்றம் ஏற்பட்டு விட்டது.

இதனால் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அழுத குழந்தைக்கு கொண்டு வந்த பால் தீர்ந்து விட்டதால் குழந்தை அழுவதையும் என்ன செய்வதென்று தெரியாமல் தாய் தவிப்பதையும் கண்டார். இதையடுத்து அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்தார்.ஆர்கானோ பால் கொடுத்தவுடன் குழந்தை நிம்மதியாக தூங்கியது. இதையடுத்து அந்த தாய் ஆர்கானோவுக்கு நன்றி தெரிவித்தார். ஒரு குழந்தைக்கு தம்மால் உதவ முடிந்ததை அடுத்து ஆர்கானோ மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளார். இவர் தாய்ப்பால் கொடுக்கும் படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து