முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க அதிபர் சிறிசேனா மறுப்பு பேஸ்புக் நிறுவனத்துக்கு ரணில் கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு,இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக அதிபர் சிறிசேனா அண்மையில் நியமித்தார்.ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை பலத்தைப்பெற்றிருக்கும் ரணில், பிரதமர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இதன் தொடர்ச்சியாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் இரு தினங்களுக்கு முன்பு கொண்டு வரப் பட்டது. இதில் ராஜபக்சே தோல்வியடைந்தார்.

ஆனால், இந்த வாக்கெடுப்பில் குளறுபடிகள் நடந்ததாக ராஜ பக்சேவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டிய நிலையில், மீண்டும் நம்பிக்கை யில்லா வாக்கெடுப்பு நடைபெற் றது. இதிலும் ராஜபக்சேவுக்கு தோல்வியே கிடைத்தது.இந்த நிலையில், தற்போது இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முடிவை அதிபர் சிறிசேனா ஏற்க மறுத்துள்ளார். இந்த வாக்கெடுப்பில் விதிமுறை கள் முறையாக கடைப்பிடிக்க வில்லை எனவும் சிறிசேனா குற்றம் சாட்டி உள்ளார். இதுபோன்ற சூழ்நிலை காரணமாக, இலங்கை அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறதுபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பர்க்குக்கு ரணில் விக்ரமசிங்கே நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கையில் முறை கேடாக ஆட்சி அமைத்திருக்கும் ராஜபக்சே தலைமையிலான அரசிடம் எங்கள் கட்சி ஆதரவாளர்களின் விவரங்களை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து