எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இரும்பு பெண்மணி என்று உலக மக்களால் போற்றப்பட்டவர். தமிழ், ஆங்கிலம் உட்பட எட்டு மொழி பேசும் ஆற்றல் பெற்றவர். ஆரம்பத்தில் நடிப்பு அதன் பிறகு பாட்டு, பின்னர் அரசியல் என்று தான் கால்வைத்த அத்தனை துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டி முத்திரை பதித்தவர். அவரை பற்றிய ஒரு கண்ணோட்டம் இங்கே பார்க்கலாம்....
பிறப்பு: 24 பிப்ரவரி 1948
பிறந்த இடம்: கர்நாடக மாநிலம்
ஆரம்ப வாழ்க்கை:
ஜெயலலிதா என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமளவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக கர்நாடக மாநிலத்தில் பிறந்தார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குடும்பம் அரச மைசூர் வம்சாவழியை சார்ந்தது. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமரா ஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னோட்டமாக ஜெயா என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதர் தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா - பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார். இந்நிலையில் வெள்ளித் திரையில் அவரது தாயார் சந்தியாவுக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால் அவர் சென்னைக்கு வந்தார்.
சென்னையிலுள்ள சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த ஜெயலலிதா, பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்களை வைத்திருந்தது. குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது.
திரைப்பட துறையில்...
ஷங்கர். வி.கிரி, இயக்கிய எபிஸில் என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். 1964-ல், திரையுலகில் அவருக்கென்று ஒரு தனி வழியை ஏற்படுத்தி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்தார். பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொண்ட ஜெயலலிதா, இசை கருவிகளை மீட்டவும், இனிமையாக பாடவும் தேர்ச்சி பெற்றார்.
1964-ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா தாய் மொழி தமிழை போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக் கொண்டார். ஜெயலலிதாவின் முதல் இந்திய படம் 1964-ல் வெளியான சின்னடா கொம்பே என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு பார்வையாளர்களின் கைதட்டலை பெற்றுத் தந்தது. ஒரு வருடத்திற்குப் பின்னர் அவர் வெண்ணிற ஆடை என்ற டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் கால்பதித்து நடிப்பைத் துறையில் கொடிகட்டி பறக்க தொடங்கினார். அதன் பிறகு, அவர் தெலுங்கு சினிமாவிலும் பிரவேசித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன. பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி பெரும் வெற்றியை பெற்றுத் தந்தது மற்றும் அவரது ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்தது. ஆயிரத்தில் ஒருவன், தனிப்பிறவி, முகராசி, அடிமைப்பெண், குடியிருந்த கோவில், மாட்டுக்கார வேலன், புதிய பூமி போன்ற படங்கள் எம்.ஜி.ஆருடன் இவர் நடித்து சக்கைப்போடு போட்ட படங்கள். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெருமையும் இவரை சாரும். திரையுலகின் பிற்பகுதியில் அவர் முன்னனி நடிகர்களான சிவாஜி கணேசன் ,ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சிவாஜியுடன் பட்டிக்காடா பட்டிணமா, சவாலே சமாளி, சுமதி என் சுந்தரி, எங்கிருந்தோ வந்தாள் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து கொடிகட்டி பறந்தார். 1968-ல், அவர் தர்மேந்திரா நடித்த இஜத் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அரசியலில் பிரவேசிக்கும் முன்னர் தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவாக அவரது கடைசி மோஷன் பிக்சர் படமான 1980-ல் வெளியான நதியை தேடி வந்த கடல் இருந்தது. ஜெயலலிதா ஒரு மிகச் சிறந்த நடிகை என்பதை எங்கிருந்தோ வந்தாள், சவாலே சமாளி போன்ற படங்கள் மக்களுக்கு உணர்த்தின. அவர் சிறந்த நடிகை மட்டுமல்ல, ஒரு அற்புதமான பாடகியும் கூட. அடிமைப்பெண் படத்தில் அவரை பாட வைத்தவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு என்று அவர் பாடிய பாடலை இன்றைக்கு கேட்டாலும் நமக்கு மெய்சிலிர்க்கும். சூரியகாந்தி படத்தில் ஓ மேரி தில்ரூபா என்ற பாடலை டி.எம். சவுந்திரராஜனுடன் இணைந்து பாடி மக்களின் பாராட்டை பெற்றார். இப்படி திரைத்துறையில் பல அம்சங்களில் வெற்றிக் கொடி நாட்டியவர்தான் ஜெயலலிதா.
அ.தி.மு.க நிறுவனரான எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கிய பிறகு ஜெயலலிதாவை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். மாநிலங்களவையில் அவருக்கு பேரறிஞர் அண்ணா இருந்த இருக்கை ஒதுக்கப்பட்டது. அதன் காரணமாகவோ என்னவோ நாடாளுமன்றத்திலும் இவரது கம்பீர குரல் ஒலித்தது. இதுவே, அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்தில் செயல்பட வழிவகுத்தது. பின்னர், அவர் தீவிரமாக அ.தி.மு.க. அரசியல் கட்சியின் உறுப்பினராக செயல்பட்டார். இதுவே, ஜெயலலிதாவை, அ.தி.மு.க கட்சியின் எதிர்கால வாரிசாக்கியது. எம்.ஜி.ஆர் முதல்வராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரனை அ.தி.மு.க.வின் எதிர்கால தலைவராக சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக கட்சி இரண்டாக பிரிந்தது. ஒன்று ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜெயலலிதா தலைமையிலும் செயல்பட ஆரம்பித்தது.
பிறகு 1989-ல், அ.தி.மு.க. ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. அவர் 5 முறை மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, முதலமைச்சர் பொறுப்பை வகித்த பெருமையை பெற்றார்.
பங்களிப்புகள்:
அவரது பதவிக்காலத்தில், அவர் மக்களின் நன்மைக்காக தீவிரமாக பணியாற்றினார். மாநில தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அவர் பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களைத் திறக்க முயன்றார். இதுவே, மாநில வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. அதே நேரத்தில், அவர் மாநிலத்தின் வறுமையை நீக்க மிகவும் கவனம் செலுத்தி அரும்பாடுபட்டார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி பல நாடுகளின் முதலீடுகளை பெற்று தொழில் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தார்.
விருதுகள்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல விருதுகளுக்கு சொந்தக்காரர். பட்டிக்காடா பட்டணமா என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது. சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ஸ்ரீ கிருஷ்ணா சத்யா என்ற படம் அவருக்கு வழங்கியது. சூரியகாந்தி படம், இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது.
தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. சென்னை பல்கலைக்கழகம் மூலமாக இலக்கியத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவியலுக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான கவுரவ டாக்டர் பட்டம் கிடைத்தது.
பாதிதாசன் பல்கலைக்கழகம், கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை வழங்கியது. சட்டத்திற்கான கவுரவ டாக்டர் பட்டத்தை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வழங்கியது. இந்த பட்டங்கள் மட்டுமின்றி வேறு சில பட்டங்களும் இவருக்கு உண்டு. தங்கத்தாரகை, இரும்பு பெண்மணி, கலை செல்வி போன்ற பல பட்டங்கள் இருந்தாலும் இவரை அம்மா என்று அழைப்பதிலேயே அவரது தொண்டர்களும், மக்களும் ஆர்வம் காட்டினர்.
அ.தி.மு.க.வின் சாதனைகள்
1991-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது.
1998-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்று வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அ.தி.மு.க. அங்கம் வகித்தது.
2001-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது.
2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
2011-ம் ஆண்டு செப்டம்பர் -அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் அப்போது இருந்த 10 (இப்போது 12) மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
2014 -ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க., 37 தொகுதிகளில் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் நேரடியாகவும், 7 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அ.தி.மு.க.வின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டன. இவற்றில் 134 தொகுதிகளில் வென்று அ.தி.மு.க. ஆட்சியைத் தக்கவைத்தது. 1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016-ல் தான்.
மேலும் 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் 50 ஆக உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை. அது மட்டுமின்றி 2011 சட்டமன்ற தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. வெற்றிவாகை சூடியது குறிப்பிடத்தக்கது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற ஒப்பற்ற திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், திருக்கோவில் அன்னதான திட்டம் இது போன்ற திட்டங்கள் அவரது ஆரம்ப கால ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள். இத்திட்டங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. குறிப்பாக, தொட்டில் குழந்தை திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதற்காக ஜெயலலிதாவை அன்னை தெரசாவே மனதார பாராட்டினார். அதன் பிறகு யானைகள் நலவாழ்வு திட்டம், புதிய வீராணம் திட்டம் போன்ற திட்டங்களை கொண்டு வந்தார். அதன் பிறகு ஏழை மக்களின் பசியை தீர்க்க அம்மா உணவகத்தை தமிழகம் முழுவதும் திறந்து வைத்தார். இந்த திட்டம் ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்திற்கும் பயன் தரக்கூடிய ஒரு ஒப்பற்ற திட்டமாகும். இந்த திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றின என்று சொன்னால் அது மிகையாகாது. அதை தொடர்ந்து ரூ. 10-க்கு அம்மா குடிநீர் திட்டம், அம்மா உப்பு, அம்மா சிமிண்ட் என்று ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் ஜெயலலிதா. பஸ்சில் பயணம் செய்யும் மக்கள் இடையில் பஸ் நிற்கும் போது ரூ. 30 வரை கொடுத்து தண்ணீர் பாட்டிலை வாங்கி வந்தார்கள். ஆனால் இப்போது ரூ. 10-க்கு அம்மா குடிநீர் பாட்டில் கிடைக்கிறது. இதை இன்றளவும் மக்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் தமிழகத்தில் திருட்டி வி.சி.டியை ஒழிக்க நடவடிக்கை எடுத்தது, கந்து வட்டியை ஒழிக்க நடவடிக்கை எடுத்தது இப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து புகழ் பெற்றவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
கடைசியாக அவர் செய்த மிகப் பெரிய நன்மை, ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் மின்சாரம் வரை இலவச மின்சாரம் கொடுத்ததுதான். இந்த திட்டத்தால் பல ஏழை குடும்பங்கள் மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளன. 100 யூனிட்டை தாண்டினால்தான் கட்டணம் செலுத்தும் நிலையை ஏற்படுத்தி கொடுத்தவர் ஜெயலலிதா. பணிபுரியும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்தவரும் அவரே. இப்படி ஏராளமான திட்டங்களை தமிழகத்திற்கு தந்த ஜெயலலிதா தீர்க்க முடியாத பல பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தார். குறிப்பாக காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தது. பெரியார் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது. இவையெல்லாம் அவரது சாதனைகளை உலகத்திற்கு இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று அவர் அடிக்கடி சொல்வார். அந்த வார்த்தை அவருக்கு மட்டுமே பொருந்தும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.