முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் அ.தி.மு.க.வினர் மவுன அஞ்சலி

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. நிறுவனருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 31வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி முதல் மேயருமான வி.மருதராஜ் தலைமையில் மணிக்கூண்டில் இருந்து ஊர்வலமாக வந்தனர். திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு வந்தடைந்த கட்சியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு உதயகுமார் எம்.பி., டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே.டி.நடராஜன், முன்னாள் ஆவின் சேர்மன் திவான்பாட்சா, முன்னாள் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, அரசு வழக்கறிஞர்கள் பழனிச்சாமி, மனோகரன், அகரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல், வார்டு செயலாளர்கள் சி.எஸ்.ராஜ்மோகன், வீரமார்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏரளமனோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து