முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாசலில் லேசான நிலநடுக்கம் ரிக்டரில் 3.3 ஆக பதிவு

சனிக்கிழமை, 12 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

சிம்லா : இமாசல பிரதேசத்தில் நேற்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் நேற்று மதியம் 12.31 மணியளவில் லேசான அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி உள்ளது. இதில் ஏற்பட்ட பொருட்சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதுபற்றி சிம்லா நகர வானிலை மைய இயக்குனர் மன்மோகன் சிங் கூறும் போது,

இந்த நிலநடுக்கம் சம்பா மாவட்டத்தின் வடகிழக்கே 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து