முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவு

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

போர்ட் பிளேர் : அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவான இந்த நிலடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்படவில்லை.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நேற்று காலை 8.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோபார் தீவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 அலகாக பதிவாகியிருந்ததாக, தேசிய பூகம்பவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தமான் நிக்கோபார் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடல் நீர் மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாததால், சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படவில்லை என கடல்சார் தேசிய தகவல் மைய இயக்குனர் எஸ்.பி.எஸ்.ஷெனாய் கூறியுள்ளார். இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து