எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேப்பியர் : ‘என்னாது நியூசிலாந்து தொடரை இந்தியா வென்று விட்டதா?.. போட்டி ஆரம்பிச்சது தெரியல அதுக்குல்ல ஜெயிச்சுட்டாங்கலா’ இப்படிதான் ஒருவர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். ஆம், 5 போட்டிகள் கொண்ட தொடரில், 2 போட்டிகள் மிச்சமிருக்கையில், முதல் 3 போட்டியில் வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டது. இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம், இந்திய அணியில் சாதனைப் பட்டியலில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றுள்ளன
10 வருட சவால்
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி 2009ம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி 10 வருடங்கள் கழித்து தற்போது அந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்றிருக்கிறது. #10YearChallenge என்ற ஹேஷ்டேக்கில் சிலர் இந்த கருத்தினை பதிவிட்டு வருகிறார்கள்.
சாதனைகள்
1) தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடர்களை வென்ற ஒரே ஆசிய கேப்டன் கோலி.
2) நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் வென்ற அணி இந்தியா.
3) அந்நிய மண்ணில் விராட் கோலி தலைமையிலான அணி 7 தொடர்களில் விளையாடி 6ல் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 13 தொடர்களில் விளையாடி 12ல் வெற்றி பெற்றுள்ளது.
4) விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 63 போட்டிகளில் விளையாடி 47ல் வென்றுள்ளது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 50 போட்டிகளில் வென்று முதலிடத்தில் உள்ளார்.
5) ஆசிய கேப்டன்களைப் பொறுத்தவரை விராட் கோலிதான் அதிக வெற்றிக்கான சராசரி வைத்துள்ளார். கோலிக்கு (72.72%) அடுத்தபடியாக பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் (58.09%), ஜெயவர்த்தனே (57.14), கங்குலி (57.35) உள்ளனர்.
சிக்ஸர் மைல்கல்
இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டோனியுடன் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். டோனி, ரோகித் இருவரும் தலா 215 சிக்ஸர்கள் விளாசியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சச்சின் (195), கங்குலி (189), யுவராஜ் (153) ஆகியோர் உள்ளனர்.
டோனி இல்லாத போட்டி
டோனி ஒருநாள் போட்டிக்கான அணியில் அரிதாகவே இடம்பெறாமல் இருப்பார். நியூசி.க்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியோடு சேர்த்து மொத்தம் 5 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. 2007ம் ஆண்டு அயர்லாந்து மற்றும் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. 2013ம் ஆண்டு தசைப்பிடிப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.
நியூசிலாந்தில் அதிக ஒருநாள் போட்டிகளில் வென்ற கேப்டன்:
அசாருதீன் - 5, டோனி - 3, கோலி - 3, கங்குலி - 2
குறிப்பிட்ட சில பேட்ஸ்மேன்களின் சிறந்த ஆட்டங்களால்தான் பெரும்பாலான தொடர்களை இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். பேட்ஸ்மேன், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்டத்திறனால் தொடரை வெல்வது அரிது. அந்த வகையில் இந்த தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
வேகப்பந்து வீச்சாளராக ஷமி இந்தத் தொடரில் ஜொலித்தார். சாஹல், குல்தீப் ஜோடி சுழற்பந்து வீச்சில் பட்டையை கிளப்பியது. பகுதிநேர பந்துவீச்சாளராக கேதர் ஜாதவும் சிறப்பாக செயல்பட்டார். பேட்டிங்கை பொறுத்தவரை வழக்கமாக ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகிய முன்வரிசை வீரர்கள் தான் செயல்பட்டு வந்தார்கள். ஆனால், இந்தத் தொடரில் முன்வரிசை வீரர்களையும் தாண்டி டோனி, ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்கள் மத்தியில் சிறப்பாக விளையாடினர். பீல்டிங்கிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.
3-வது ஒருநாள் போட்டியில் சாஹல் பந்துவீச்சில் பாண்ட்யாவிடம் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கேட்சாகி ஆட்டமிழந்தார். இந்த கேட்சினை பாண்ட்யா காற்றில் பறந்தபடி டைவ் அடித்து பிடித்தார். பாண்ட்யா பாய்ந்து பந்தினை பிடித்த படங்கள் ட்விட்டரில் வைரலாக பகிரப்பட்டது.
இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வந்தது. அதனால், பல போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. டோனி கடந்த ஆண்டில் பார்மில் இல்லாததும் பிரச்னையாக இருந்து வந்தது. அதனால், 4, 5, 6வது இடங்களுக்கு பல பேட்ஸ்மேன்களை கோலி மாற்றிப் பார்த்தார்.
பார்முக்கு திரும்பிய...
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முதல் டோனி மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அந்த வரிசையில் அம்பத்தி ராயுடுவும், தினேஷ் கார்த்திக்கும் அட்டகாசமாக போட்டியை முடித்து வைத்தனர். எந்தவொரு பதட்டமும் இல்லாமல் 7 ஓவர்களுக்கு முன்பாகவே ஆட்டத்தை வெற்றிபெற செய்துள்ளனர். இது, இந்திய அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
ஆஸ்திரேலியா தொடரில் டோனி தொடர்ந்து மூன்று அரைசதம் விளாசிய போது, அவர் மீண்டும் பார்முக்கு திரும்பிவிட்டார் என்று அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக டோனி மீது கடுமையாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. டோனி ஓய்வு பெற வேண்டும், உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். அதனால், டோனி மீண்டும் பார்முக்கு வந்தது இந்திய அணிக்கு நம்பிக்கையை கொடுத்தது.
இடத்தை பிடிக்க..
இது ஒருபுறம் இருந்தாலும், உலகக் கோப்பைக்கான அணியில் தன்னுடைய இருப்பை தக்கவைத்து கொள்ளவே ஆடுகிறார் என்ற கருத்து எழுந்தது. அதேபோல், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது என்றே பலரும் கூறியுள்ளனர். ராயுடு, தினேஷ் கார்த்திக் என பலரும் தங்களுடைய இடத்தை அசத்தலாக உறுதி செய்துள்ளனர். ஒருவருக்கொரு சொதப்பாமல் போட்டி போட்டு விளையாடினர். இதனால் மிடில் ஆர்டரில் யாராவது செட் ஆவார்களா? என்ற நிலை சென்று, தற்போது யாரை எடுப்பது என்ற குழப்பமே உருவாகும் நிலை வந்துவிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.