முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் இன்று நடை திறப்பு: பாதுகாப்பு பணியில் போலீசார்

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம், சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. இதையொட்டி 3 எஸ்.பி.க்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டம் நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்று கனகதுர்க்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் சாமி தரிசனமும் செய்தனர். இதனால் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. சபரிமலைக்கு செல்லும் இளம்பெண்களை அவர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசிமாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார். நாளை அதிகாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் கணபதி ஹோமம் நடக்கிறது.தொடர்ந்து 17-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும். மாசி மாத பூஜையின் போதும் சபரிமலைக்கு இளம்பெண் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதைத் தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல், நடைப்பந்தல் போன்ற பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 3 எஸ்.பி.க்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து