முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு கேரள வீரர் தாயாருடன் செல்போனில் பேசியுள்ளார்.  

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 45 வீரர்கள் பலியானார்கள். கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற வீரரும் இந்த தாக்குதலில் பலியானார். பலியான வசந்தகுமாருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது உடல்   சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடந்தது.

வயநாடு, லக்கிடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் வசந்தகுமார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.  பின்னர் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடந்தது. வசந்த குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேற்று காலை முதலே ஏராளமான மக்கள் கண்ணீருடன் காத்திருந்தனர்.  வசந்தகுமார் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோதுதான் பலியாகி உள்ளார்.                         

அவர், இறப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு தாயார் வசந்தாவுடன் செல்போனில்      பேசி உள்ளார். அப்போது ஜம்முவில் மிகவும் குளிராக இருப்பதாக கூறி உள்ளார்.  தாயாருடன் பேசிய 2 மணி நேரத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் வசந்தகுமார் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து