முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருமகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் பிரச்சாரம் செய்ய மாட்டேன் - அகிலேசுக்கு முலாயம் சிங் மிரட்டல்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : மருமகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று அகிலேஷ் யாதவை முலாயம் சிங் யாதவ் மிரட்டியுள்ளார்.

முலாயம் சிங்கின் இளைய மகன் பிரத்தீக் சிங் யாதவ் மனைவி அபர்ணா பிஷ்த் யாதவ்.  கடந்த 2017 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்போது அவர் சமாஜ்வாடி கட்சியின் தரப்பில் சம்பல் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியது. இது தொடர்பாக முலாயம் சிங் யாதவ்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அபர்ணா கூறி விட்டார். ஆனால் இப்போது அகிலேஷ் யாதவ் வசம் கட்சி உள்ளது.

அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் ஏற்கனவே இரண்டு முறை எம்.பி.யாக இருந்துள்ளார். இப்போது மூன்றாவது முறையாக கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். இப்போதைய தேர்தலில் முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார்கள். குடும்ப உறுப்பினர்களே அதிக தொகுதியில் களமிறங்குகிறர்கள் என விமர்சனம் எழுகிறது.

இந்நிலையில் அபர்ணா யாதவிற்கும் சீட் வேண்டும் என்று அகிலேஷ் யாதவிடம், முலாயம் சிங் வலியுறுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மருமகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் பிரசாரம் செய்ய மாட்டேன் எனவும் மிரட்டியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து