முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமனம்

சனிக்கிழமை, 23 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா பதவிக் காலம் விரைவில் முடியவுள்ள நிலையில் புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகில் சிறப்பு வாய்ந்த கடற்படைகளில் இடம்பெற்றுள்ள இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா-வின் பதவிக்காலம் 31-5-2019 அன்று முடிவடைகிறது. இந்நிலையில் புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படையின் கிழக்குப் பகுதி தளபதியாக பொறுப்பு வகிக்கும் கரம்பிர் சிங் முன்னர் ஐ.எம்.எஸ்.டெல்லி, ஐ.எம்.எஸ்.ரானா கடற்படை தளங்களின் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார். 38 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் பணியாற்றி வரும் கரம்பிர் சிங், அதி விஷிட் சேவா, பரம் விஷிட் சேவா உள்ளிட்ட சிறப்புக்குரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து