முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் நிதி பத்திரம் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை தாக்கல் செய்ய அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யும்படி அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் நிதி பெறுவதில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதற்காக தேர்தல் பத்திரங்களை மத்திய அரசு கடந்த 2016-ல் அறிமுகப்படுத்தியது. இந்திய குடிமக்கள், அமைப்புகள் யார் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கலாம். இவற்றை அரசியல் கட்சிகள் வங்கியில் செலுத்தி பணமாக்கி கொள்ளலாம்.

இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மறுநாள் உத்தரவு வழங்குவதாக கூறினர். அதன்படி இவ்வழக்கில் நேற்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அப்போது தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள், நன்கொடையாளர்களின் பெயர்கள் மற்றும் பெறப்பட்ட தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மே மாதம் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இந்த அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யும் படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து