முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு ரூபாய்க்கு அரிசி, பருப்பு, உப்பு: மத்திய அமைச்சர் வாக்குறுதி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர், ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு ரூபாய்க்கு 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு, உப்பு ஆகியவை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் கூறினார்.

பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியை வீழ்த்த பா.ஜ.க. வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மாவட்டம் சவுத்வார் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது,

ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு ஒரு ரூபாய் 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு மற்றும் உப்பு ஆகியவை வழங்கப்படும் இத்திட்டத்தால் ஒடிசாவில் 3.26 கோடி மக்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து