முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் டூ தேர்வில் சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவர்கள் சாதனை

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      மதுரை
Image Unavailable

மதுரை, - பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மதுரை சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவர் லட்சுமணன் 600 - க்கு 592 மார்க் எடுத்து சாதனை படைத்தார். 2 - வதாக மாணவர் ராம்பிரபு 590 மதிப்பெண்களும், 3 - வதாக மாணவர் அஜித்குமார் 586 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர். இந்த மாணவர்களை பள்ளித்தலைவர் ராஜா கிளைமாக்ஸ் பாராட்டினார். அவர் கூறுகையில்,மாநில அளவில் சாதனை பட்டியல் வெளியிடப்படுவது கைவிடப்பட்ட சூழ்நிலையிலும், சி.இ.ஓ.ஏ.பள்ளி தனது மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு சிறப்பான திட்டத்துடன் அரசு பொதுத்தேர்வுக்கு தயார் செய்ததன் பலனாக தொடர்ந்து சாதனை படைப்பது நிகழ்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பள்ளி இணை தலைவர் சாமி, துணைத்தலைவர்கள் விக்டர் தனராஜ், சவுந்தரபாண்டி, அசோகராஜ், பிரகாஷ், பாக்கியநாதன், முதல்வர்கள் ஹோமா ஆட்ரே,நசீம்பானு,கோமுலதா ஆகியோரும் சாதனை படைத்த மாணவர்களை வெகுவாக பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து