முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். நிதி அமைச்சர் திடீர் ராஜினாமா

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நிதி அமைச்சர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு, நிதி உதவி அளிக்க சர்வதேச நிதி ஆணையம் முன்வந்தது. இது தொடர்பான திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்வதற்காக அந்நாட்டின் நிதி அமைச்சர் அசாத் உமர் அமெரிக்கா சென்றிருந்தார். இந்த பேச்சுவார்த்தையை முடித்து விட்டு அண்மையில் அவர் நாடு திரும்பினார்.

இந்த நிலையில், அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் டுவிட்டரில், பிரதமர் இம்ரான்கான், மந்திரி சபையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, நிதி அமைச்சராக இருக்கும் நான் எரிசக்தி துறை மந்திரி பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது அவரின் விருப்பம். அதன் காரணமாகவே, நிதி மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என தெரிவித்தார். பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி பிரச்சினையை நிதி அமைச்சர் அசாத் உமர் முறையாக கையாளவில்லை என்று வர்த்தக சமூகத்தினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து