முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள்(நாளை) முதல் 24-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. நாமக்கல்லில் 8 செமீ, கன்னியாகுமரி கோதையாறில் 7 செமீ, கொடைக்கானலில் 6 செமீ, மஞ்சளாறில் 5 செமீ, வேடசந்தூரில் 4 செமீ மழை பதிவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து