முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முடக்குவாத சிறுவனுக்கு மதிய உணவு: பாதுகாப்பு படை வீரருக்கு குவியும் பாராட்டுகள்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பணியில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர் முடக்குவாத சிறுவனுக்கு மதிய உணவை ஊட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி மத்திய பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். அணிவகுத்து சென்ற வாகனங்களின் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றியவர் இக்பால் சிங். இவர் ஸ்ரீநகரில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். இந்நிலையில், சாலையோரம் அமர்ந்திருந்த முடக்குவாதம் பாதித்த சிறுவனுக்கு தனது மதிய உணவை அவர் ஊட்டி விட்டார். அதனுடன் அவனது வாயை துடைத்து விட்டபடி, தேவையான போது அருந்துவதற்கு நீரும் கொடுத்துள்ளார். இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்த செயலுக்காக சிங்கிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி இயக்குனர் ஜெனரல் கவுரவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து