முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன், விவிபாட் எந்திரங்களின் அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் சரிபார்க்கக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.   

வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும், 100 சதவீதம் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில், சென்னையைச் சேர்ந்த ஒரு அமைப்பு பொதுநல மனுவாக தாக்கல் செய்தது.

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் விடுமுறைக்கால அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே போன்ற வழக்கு தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்து, அந்த வழக்கில் தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது எனகூறி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  

முன்னதாக, 50 சதவீத வாக்கு எண்ணும் இயந்திரங்களுடன் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் வாக்குகளையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், 21 எதிர்க்கட்சிகள் மனு தாக்கல் செய்து இருந்தன.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் , ஒரு மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி ஒவ்வொன்றிலும், தலா 5 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டையும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை, கடந்த மே 7 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து