முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கான நிதி திட்டம் விரிவாக்கம்: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி கடிதம்

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : விவசாயிகளுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக பிரதமர் நரேந்திரமோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி கூறியுள்ளார்

பெரிதும் உதவும்...

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, அனைத்து விவசாயிகளுக்கும் வருடம் 6000 வழங்கும் வகையில் நிதி உதவித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருப்பதும், கால்நடைகளைத் தாக்கும் நோய்களுக்கான சிகிச்சைச் செலவை அரசே ஏற்றுக் கொள்வதாக அறிவித்து இருப்பதும் விவசாயிகளுக்கு பெரிதும் உதவும்.

சமூகப் பாதுகாப்பை...

இதேபோல் கடைகள் வைத்திருப்போர், சில்லறை வணிகர்கள், சுய தொழில் புரிவோருக்கான 3000 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். இவை அனைத்தும் சமுதாயத்தின் பெரும்பாலான பிரிவு மக்களுக்கு வலிமையான சமூகப் பாதுகாப்பை வழங்கும். இவ்வாறு தனது கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து