முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சுற்றுசூழல் தினத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்

புதன்கிழமை, 5 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்கு, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் உலக சுற்றுசூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், பிரமதர் மோடி மரக்கன்றுகளை நட்டு, பூமியை பசுமையாக வைத்துக் கொள்ளும்படி டுவிட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இயற்கையை கடவுளாக வணங்கும் சமுதாயத்தில் பிறந்து, வளர்ந்த அனைவரும் பூமியை தூய்மையான கோளாக உருவாக்க உறுதிகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மழைக்காலம் நெருங்குவதால், மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்லாமல், அவை வளர்வதற்கான பராமரிப்பு வழிகளையும் கண்டறிய வேண்டும் எனவும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்க மத்திய அரசு, ‘செல்பி வித் சாப்லிங் என்ற இயக்கத்தை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து