முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவம்: உளவுத்துறை தலைவர் நீக்கம் - அதிபர் சிறிசேனா நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக தேசிய உளவுத்துறை தலைவரை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து  நெருக்கடி நிலை நிலவி வருகிறது. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி பாராளுமன்ற தேர்வுக்குழு விசாரணை நடத்தியது. கடந்த வாரம் இந்த விசாரணையில் சாட்சியம் அளித்த உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ், இந்த தாக்குதல் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தார். அதிபர் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான கூட்டங்கள் நடத்த தவறி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த பதவி நீக்கத்துக்கான காரணம் குறித்து அதிபர் அலுவலகம் எந்த காரணமும் தெரிவிக்கவில்லை. குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பு பாதுகாப்பு குறைபாடு நிலவியது குறித்து பாராளுமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உளவுத்துறை தலைவர் சாட்சியம் அளித்த போது அதிபர் உத்தரவின் பேரில் நேரடி ஒளிபரப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து