முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீர் பிரச்னைகளுக்காக பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

தண்ணீர் பிரச்னைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை ஏதும் விடப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை...

தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் தண்ணீர் பிரச்னை தாண்டவமாடுவதாகவும் அதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுவருவதாகவும் தனியார் பள்ளிகள், தண்ணீர் பிரச்னை காரணமாக தன்னிச்சையாக விடுமுறை விடுவதாகவும் செய்திகள் வெளியாயின. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்.,

ஆய்வு நடத்தப்படும்...

தண்ணீர்ல பிரச்னை காரணமாக எந்த பள்ளிக்கும் விடுமுறை விடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். பள்ளிகளின் தண்ணீர் தேவை குறித்து வரும் 17ம் தேதி முதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்த ஆய்வுகளில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் குறிப்பிட்ட பள்ளிகளின் தண்ணீர் தேவை குறித்தும் அதற்கான நீராதாரங்களை பெறுவது குறித்தும் ஆய்வு நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

210 வேலை நாட்கள்...

கடந்த ஜூன் 3ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பிளஸ்-2 உள்ளிட்டபாடதிட்டங்கள் மாற்றப்பட்டிருப்பதால் புதிய பாடங்களை கற்பிக்க 210 வேலைநாட்கள் அவசியம் தேவை என்பதால் பள்ளிகள் குறித்த நாளில் திறக்கப்பட்டுள்ளதாகவும், அரசின் நடவடிக்கைக்கு மாணவர்களும், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே அமை்ச்சர் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து