முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நரிக்குறவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

நரிக்குறவர் குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போதுபோளூர் தொகுதி உறுப்பினர் கே.வி.சேகரன், தனது தொகுதியில் உள்ள நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க முன்வருமா? என்று கேட்டார். அதற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளிக்கையில், போளூர் வட்டத்தில் உள்ள 62 நரிக்குறவர் குடும்பங்களில் 27 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு கஸ்தம்பாடி கிராம நத்தத்தில் விஸ்தீரனம் 0.45.0 ஹெக்டேர் பரப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதில் ஒவ்வொரு குடும்பத்திற்கு 3 சென்ட் அளவுள்ள வீட்டுமனை பட்டா வழங்க போளூர் வட்டாட்சியரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நலிந்த பிரிவினருக்கு அரசு பட்டா வழங்கி வருகிறது. தேவையின் அடிப்படையில் பட்டா வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து