முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையோ அல்லது இரவு நேரத்திலோ நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடற்கரை மாவட்டங்களில் மேற்கு, தென்மேற்கு திசையில் இருந்து அவ்வப்போது 35 முதல் 45 கி.மீ வேகத்தில் வலுவான காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 7 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலாரில் 6 செ.மீ மழையும் பெய்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து