முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் வான்வழி தாக்குதல் - 20 தலிபான் தீவிரவாதிகள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அரசுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இதில் பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா தலைமையில் தலிபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக இந்த பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் கஜினி மாகாணத்தின் காராபாக் மாவட்டத்தில் சையது வாலி மற்றும் மர்வார்டா ஆகிய பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து