முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்களின் அனுமதியின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்: சவுதி அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது. இந்த சூழலில், சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தங்கள் கணவர், தந்தை அல்லது வேறு ஆண் உறவினர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அந்த விதியை சவுதி அரேபிய அரசாங்கம் நீக்கியுள்ளது.

21 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும், ஆண்களின் ஒப்புதல் இல்லாமலேயே விண்ணப்பம் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தங்கள் குடும்பத்து ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து