முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

35-வது நாள்: வெந்தய நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Image Unavailable

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாவின் 35-வது நாளான நேற்று அத்திவரதர் வெந்தய நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் தரிசனம் அளித்தார்.

புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். கடந்த 31-ம் தேதி வரை சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து செல்கின்றனர். நேற்று முன்தினம் பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அத்திவரதரை தரிசிக்க வசதியாக தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாவின் 35-வது நாளான நேற்று அத்திவரதர் வெந்தய நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து