முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை மையம் தகவல்

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் மழை குறைய வாய்ப்புள்ளது என்றும், வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 13-ம் தேதி முதல் மழை மீண்டும் அதிகரிக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலங்களில் முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், இன்று முதல் தமிழகம், கேராளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் காற்றழுத்த தாழ்வு உருவானால் 13-ம் தேதி முதல் மீண்டும் மழை அதிகரிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கக்கடலில் 40 முதல் 50 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து