முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் லெகிமா புயல் தாக்கியதில் 32 பேர் பலி - 60 லட்சம் பேர் வெளியேற்றம்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவை லெகிமா புயல் தாக்கியதில் 32 பேர் பலியாயினர். 16 பேர் காணாமல் போய் உள்ளனர். இந்த ஆண்டில் சீனாவை தாக்கிய 9-வது புயல் இதுவாகும்.

லெகிமா புயல் சீனாவின் ஷாங்காய் வழியாக வென்லிங் நகரில் கரை கடந்தது. அப்போது அங்கு மணிக்கு 187 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் ஷாங்காய் உள்பட பல நகரங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலியாயினர். 16 பேர் மாயமாகினர். காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

யாங்ஜியா மாகாணத்தில் வென்ஜோ நகரில் நிலச்சரிவால் அணை உடைந்து ஊருக்குள் நீர் புகுந்தது. இதில் அணையைச் சுற்றியுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 10.8 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். செஜியாங் மாகாணத்தில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 ஆயிரம் வீடுகள், ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு பயிர்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 3,200 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் 200 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து