முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம், புதுவையில் 11, 12-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 11, 12-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களிலும், தென்மேற்கு பருவக் காற்று காரணமாக கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் இன்று அல்லது நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அது தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு இருக்கிறது. மேலும் கடலோர மாவட்டங்களில் தற்போது வெப்பநிலை உயர்ந்திருப்பதால் வெப்பச் சலனமும் ஏற்படலாம். இந்த இரு நிகழ்வுகள் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும். சில இடங்களில் கனமழையும் பெய்யலாம்.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் சின்னகள்ளார் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ, வால்பாறையில் 4 செ.மீ, பேச்சிப்பாறையில் 3 செ.மீ, மயி லாடி, இரணியல், நாகர்கோவில் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து