முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்க புத்தர் சிலையை பிரதமர் மோடி, மங்கோலிய அதிபர் திறந்து வைத்தனர்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

மங்கோலியாவில் உள்ள மடத்தில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான புத்தர் சிலையை இந்திய பிரதமர் மோடியும், மங்கோலிய அதிபரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தனர்.

மங்கோலிய அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா 5 நாள் பயணமாக நேற்று இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார். டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மங்கோலிய அதிபர் சந்தித்து பேசினார். அப்போது, மங்கோலிய தலைநகர் உலான்பாதரில் உள்ள கண்டன் மடத்தில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான புத்தர் சிலையை, இரண்டு தலைவர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தனர். புத்தர் கையில் கிண்ணம் வைத்திருப்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மூத்த துறவி ஒருவர் பங்கேற்று, பிரார்த்தனை செய்து முறைப்படி சிலை திறப்பை அறிவித்தார். மோடியும், மங்கோலிய அதிபரும் பட்டனை அழுத்தி புத்தர் சிலையை திறந்து வைத்து வணங்கினர். பின்னர் புத்த துறவி மோடிக்கு பட்டாடை மற்றும் புத்தர் சிலையை வழங்கி கவுரவித்தார்.

இந்தியா - மங்கோலியா இடையிலான ஆன்மீக தொடர்பு மற்றும் புத்த பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது. தற்போது தங்க புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ள கண்டன் மடத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு மோடி சென்ற போது, ஆன்மீக உறவின் அடையாளமாக போதி மரக்கன்றை வழங்கினார். 19-ம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட கண்டன் மடம், மங்கோலியாவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மடாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து