எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் தொழில் தொடங்க 41 நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டியிருப்பதால் அதை தாங்கி கொள்ள முடியாத மு.க. ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, மேட்டூரில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. அரசால் அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சியில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஒரு தவறான குற்றச்சாட்டை அவர் செல்கின்ற இடங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் பேசி வருகிறார். 2011-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதிலிருந்து ரூபாய் 3.23 கோடி மதிப்பீட்டில் மேட்டூர் அணைக் கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள 9 ஏரிகளை சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேட்டூர் கிழக்குக் கரை மற்றும் மேற்குக் கரை கால்வாய்களில் செல்கின்ற நீர் வீணாகாமல் கடைமடை பகுதி முழுவதும் தண்ணீர் கிடைக்க வேண்டுமென்பதற்காக நவீன முறையில் கான்கிரீட் கால்வாயாக மாற்றி கொடுக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. முதற்கட்டப் பணி நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் கட்டப் பணிகள் துவங்கப்படவுள்ளன. அரசு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீரை, முழுமையாக கிடைக்க இத்திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இதற்காக சுமார் ரூபாய் 250 கோடி செலவிடப்பட்டிருக்கின்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியினால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்த சாதனையை விளக்கும் வகையில் மேட்டூர் அணை பூங்காவின் முகப்புப் பகுதியில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் நினைவுத்தூண் கல்வெட்டு பதித்து பூங்காவின் நுழைவுவாயில் புனரமைக்கும் பணியும் முடிக்கப்பட்டுள்ளன.
83 ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்த மேட்டூர் அணையை தூர்வாரி சரித்திரம் படைத்த அரசு எங்களுடைய அரசு. முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் வந்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தேன். இதன் மூலம் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து தங்கள் விளைநிலங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். பருவ காலங்களில் பொழிகின்ற மழைநீரை சேமிக்கும் வகையில்,தொலைநோக்குச் சிந்தனையோடு, ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை தூர்வாரும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது முழுக்க, முழுக்க விவசாயிகளை கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தை குறை கூறும் எதிர்க்கட்சியினர், அவர்களது ஆட்சிக் காலத்தில் ஒருஏரியைக் கூட தூர்வாரவில்லை. பொதுப்பணித்துறையின் கீழ் பராமரிக்கப்படும் சுமார் 14,000 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் பராமரிக்கப்படும் சுமார் 26,000 ஏரிகள் என ஆக மொத்தம் தமிழ்நாட்டில் இன்றைக்கு 40,000 ஏரிகள், குளங்கள் உள்ளன. இவைகளை படிப்படியாக தூர்வாரும் வகையில் குடிமராமத்து திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகையினை ஒதுக்கி, குறிப்பிட்ட ஏரிகளை எடுத்துக் கொண்டு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ரூபாய் 100 கோடியும், இரண்டாம் கட்டமாக ரூபாய் 328 கோடியும் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு, பொதுப்பணித் துறை மூலம் 1,829 ஏரிகளை தூர்வாருவதற்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளை தூர்வாருவதற்கு ரூபாய் 1,250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆனால், சிறப்பான இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சியினர் குறைகூறி கொண்டிருக்கின்றார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். தி.மு.க. ஆட்சியில் மேட்டூர் முதல் கொள்ளிடம் வரை எத்தனை தடுப்பணைகள் கட்டினார்கள்? தமிழகத்திலே அதிக ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர் துரைமுருகன்தான். ஆனால், ஒரு தடுப்பணை கூட தி.மு.க. ஆட்சியில் கட்டவில்லை. இப்படி எதுவுமே செய்யாத தி.மு.க. மற்றும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், எங்களை பற்றி பேசுவதற்கு எந்ததகுதியும் இல்லை என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்த பொழுது, அங்குள்ள தொழிலதிபர்கள் இன்றைக்கு தமிழ்நாடு வளம் கொழிக்கும் மாநிலமாகவும், தொழில் தொடங்க உகந்த மாநிலமாகவும் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்கள். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்க 41 தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார்.
அரசு தொழிற்சாலைகளை தொடங்கி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கை செழிக்க வேண்டும். அதற்காகத்தான் நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி விவசாயிகளுக்கு போதிய நீர் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வேளாண்மைத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அம்மாவின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்த்து, எந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்பதை மக்களாகிய நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.