முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமை திருத்த மசோதா ஊடுருவல்பேர்வழிகளிடம் இருந்து வடகிழக்கு மாநிலங்களை காக்கும்: அமித்ஷா

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி : குடியுரிமை திருத்த மசோதாவில் ஒரு புதிய பிரிவைச் சேர்ப்பது நாகாலாந்து, அருணாச்சல், மிஜோரம் மாநில மக்களை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி செட்டில் ஆகுபவர்களிடமிருந்து தடுத்துக் காக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மிஜோரம் முதல்வர் ஜொராம்தங்காவை சந்தித்த அமித் ஷா, குடியுரிமை திருத்த மசோதாவில் அண்டை நாடுகளிலிருந்து எல்லை தாண்டி ஊடுருபவர்களை தடுக்க சிறப்புப் பிரிவு ஒன்று சேர்க்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.  மிஜோரம், அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்தில் இன்னர் லைன் பெர்மிட் என்ற ஐ.எல்.பி முறை நடைமுறையில் உள்ளது, பாதுகாக்கப்பட்ட பகுதியான இங்கு பிற மாநிலத்தவர்கள் குறிப்பிட்ட காலம் கழிப்பதற்கு மத்திய அரசின் அனுமதி வேண்டும். இந்த ஐ.எல்.பி. வலுப்படுத்தப்பட்டு குடியுரிமை திருத்த மசோதா மோசமான விளைவுகளை இங்கு ஏற்படுத்தப் படமால் பாதுகாக்கப்படும் என்று அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து