முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, சேலம், கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை கடந்த 4 மாதங்களாக நீடித்து நல்ல மழை பொழிவு ஏற்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை நாளை(இன்று) முதல் குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 20-ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட நிலை காணப்படும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக் கல்லாரில் 7 செ.மீ. மழையும், நாமக்கல் பாப்பாரப்பட்டியில் 4 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. அதே நேரம் திருச்சுழி, திருவாடானை, மேட்டுப்பாளையம், நடுவட்டம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீ.மழையும் சூலூர்,பொன்னாகரம், தாம்பரம் ஆகிய 2 இடங்களில் 2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

இதனிடையே வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் மீனம்பாக்கம், அனகாபுத்தூர், வேளச்சேரி, பெரும்பாக்கம், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதற்கு முன்னதாக வரும்  20-ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து