முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி: 8 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி (ஞாயிறு) வருகிறது. அதற்கு முதல் நாளான சனிக்கிழமை விடுமுறை என்பதால், இந்த பண்டிகையைக் கொண்டாட சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். விரைவு ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்னதாகவே ரெயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதனால், வழக்கமாக இயக்கப்படும் தென் மாவட்ட விரைவு ரெயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. மேலும், காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்கம் குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இதற்கிடையே, வரும் தீபாவளியையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதுதொடா்பாக, ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:–

தீபாவளியையொட்டி திருநெல்வேலி, கோயம்புத்தூர், நாகர்கோவில், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் 8 சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல. இதில், கூடுதல் ரெயில்கள் இயக்கவும் வாய்ப்புள்ளது. இன்னும் சில நாட்களில் தெற்கு ரெயில்வே இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும் என்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து