முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது நாளில் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 58 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோகித் சர்மா 117 ரன்களும், ரகானே 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ரகானே தனது 6வது சதத்தை அடித்து அசத்தினார். ரகானே 115 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மற்றொரு முனையில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதத்தை அடித்தார். அவர் 255 பந்துகளில் 28 பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 212 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து