முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் தாசில்தார் எரித்துக்கொலை எதிரொலி: கயிறு கட்டி பின்னால் நின்று மனு வாங்கும் தாசில்தார்கள்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெண் தாசில்தார் எரித்துக்கொலை செய்யப்பட்டதை அடுத்து  ஆந்திராவில் கயிறு கட்டி பின்னால் நின்று தாசில்தார்கள் மனு வாங்குகிறார்கள். 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மேட் என்ற இடத்தில் விஜயா ரெட்டி என்ற பெண், தாசில்தார் அவர் அலுவலகத்திலேயே தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார்.  இதைத் தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா அதிகாரிகளிடம் ஒருவித அச்சம் நிலவி வருகிறது.

ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள தாசில்தாரான உமா மகேஸ்வரியை சந்திக்கவரும் கிராமவாசிகள், அவரது அறையில் போடப்பட்ட கயிற்றின் பின்னால் இருந்து சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தங்கள் மனுவை அளிக்க விரும்புவோர் பாதுகாப்பான தூரத்திலிருந்து ஒப்படைக்க இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விஜயா ரெட்டியின் கொலைக்குப் பிறகு நான் அச்சம் அடைந்து உள்ளேன் என உமாமகேஸ்வரி கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து