முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்தில் இரு ரெயில்கள் - நேருக்கு நேர் மோதல்- 16 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

தாகா : வங்காளதேசத்தில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பயணிகள் உயிரிழந்தனர்.   

வங்காளதேசத்தில் தெற்கு துறைமுக நகரமான சிட்டாகாங் சென்று கொண்டிருந்த ரெயிலும் தலைநகர் தாகாவிற்கு சென்று கொண்டிருந்த ரெயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. தாகாவிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பிரம்மன்பாரியா மாவட்ட பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் ரெயில் சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் ரெயில்களின் சில பெட்டிகள் பலத்த சேதமடைந்தன.

இந்த விபத்தில் 16 பயணிகள் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து