முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல் - 30 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

பாக்தாத், ஏப். 20 - ஈராக் நாட்டில் நான்கு வெவ்வேறு மாகாணங்களில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தபட்சம் 30 பேர் பலியானதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பாக்தாத்திலும் அதை சுற்றிலும் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டார்கள். கிர்குக் மாகாணத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். சமாரா என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். இவ்வாறு மொத்தம் 30 பேர் பலியானதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தாக்குதலை நடத்தியது யார்? எந்த இயக்கம்? என்பது பற்றிய விபரங்கள் கூறப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்