முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள்கைது

திங்கட்கிழமை, 7 மே 2012      உலகம்
Image Unavailable

 

காக்கிநாடா, மே - 7- இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்த 6 இலங்கை மீனவர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் அருகே வங்காள விரிகுடா  கடல் பகுதியில்  சட்டவிரோதமாக மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக 6 இலங்கை மீனவர்களை  கைது செய்துள்ளதாக ஆந்திர கடலோர பாதுகாப்பு போலீஸ் படை அதிகாரி ஒருரர் தெரிவித்தார். இவர்கள் 6 பேரும் சட்டவிரோதமாக இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்ததால்  கைதுசெய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார். வழக்கமான ரோந்து மற்றும் கண்காணிப்பு  பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார். முறையான விசாரணைக்கு பிறகு இவர்களின் மீன்பிடி படகையும் ஆந்திர போலீசர் பறிமுதல் செய்தனர்.  இவர்கள் பிடித்து வைத்திருந்த 500 கிலோ மீனையும் போலீசார்  பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கடல் பகுதி என்று தெரிந்தும் இவர்கள் வேண்டும் என்றே  இங்கு மீன் பிடித்துள்ளனர் என்றும் இவர்கள்  பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்றும் அந்த போலீஸ் அதிகாரி  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்