முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் புலிகள் எண்ணிக்கை ஆயிரத்து 706 ஆக அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.29 - நாட்டில் புலிகள் எண்ணிக்கை ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி நாட்டில் புலிகள் எண்ணிக்கை ஆயிரத்து 411 ஆக இருந்தது. இது கடந்த 2010-ம் ஆண்டு முடிய ஆயிரத்து 706 அதிகரித்துள்ளது என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மலைப்பகுதி, சரணாலயங்கள், மலைப்பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகள், புலிகள் வசிக்கும் பகுதிகளில் நவீன கேமிராக்களை பொருத்தி விஞ்ஞான முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. கம்ப்யூட்டர்கள் மூலமும் புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு நாட்டில் உள்ள 19 மாநிலங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள், மிருக காட்சி சாலைகள், சரணலாயங்கள் ஆகியவைகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் புலிகள் எண்ணிக்கை ஆயிரத்து 411 ஆக குறைந்திருப்பது தெரியவந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்