முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரகளைசெய்த ஷாருக்கானுக்கு மும்பை மைதானத்தில் நுழையதடை

வெள்ளிக்கிழமை, 18 மே 2012      சினிமா
Image Unavailable

 

மும்பை, மே. - 18 - மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை விதிப்பதாக மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் கொல்கத்தா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் வெற்றிக் களப்பில் மிதந்த ஷாருக்கான் தமது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். மேலும் ஷாருக்கானின் பாதுகாவலர்கள் மைதான காவலர்களுடன் மோதலில் ்டுபட்டனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஷாருக்கானை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை விதிப்பது என்று மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. மும்பை கிரிக்கெட் சங்க பொருளாளர் ரவிஷாவந்த் இச்சம்பவம் பற்றி கூறுகையில்,  ஷாருக்கான் மும்பை கிரிக்கெட் சங்க பாதுகாவலர்கள், நிர்வாகிகள், தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரை அவதூறாகவும் அவமதித்துப் பேசினார். அவரை வாழ்நாள் முழுவதும் இந்த மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார். இச்சம்பவம் தொடர்பாக ஷாருக்கானை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்