முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் மானபங்கம்: ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் கைது

சனிக்கிழமை, 19 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, மே.19 - டெல்லியில் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் மது போதையில் பெண்ணை மானபங்கம் செய்த சம்பவம் நடந்துள்ளது. கிரிக்கெட் வீரரின் பெயர் லூக்போமர்ஸ்பேச். இவர் பெங்களூர், ராயல், சேலஞ்சர்ஸ் அணியில் உள்ளார். டெல்லியில் நடந்த போட்டியில் விளையாடுவதற்காக சென்றிருந்தார். இதில் பெங்களூர் அணி வெற்றி பெற்றதும் வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். லூக் டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டலான மவுரியா ஷெராட்டனில் உள்ள மதுபான விடுதிக்கு சென்று மது அருந்தினார். அந்த ஓட்டலில் அமெரிக்கவாழ் இந்திய பெண் ஒருவர் தனது வருங்கால கணவருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். 

போதையில் இருந்த வீரர் லூக் அந்த தம்பதியிடம் ரகளை செய்துள்ளார். அந்த பெண்ணை மானபங்கம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதை தடுத்த அந்த பெண்ணின் காதலனை வீரர் லூப் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. டெல்லி போலீசார் ஓட்டலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்த புகாரின் பேரில் லூக் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் லூக் கைது செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்