எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஏப்.21 - ஐ.பி.எல். போட்டியில் எளிமையான இலக்கை சாதாரணமாக கையாண்ட மும்பை இந்தியன்ஸ் இறுதியில் கடைசி பந்தில் புனே அணியை வென்றது.ஐ.பி.எல். போட்டி தொடரின் 21-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், யுவராஜ்சிங் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. இரண்டு அணிகளுமே சமபலம் கொண்டவையாக கணிக்கப்பட்டு இருந்ததால் ரசிகர்கள் இடையே கடும் எதிர்பார்ப்பு நிலவியது. டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் கேப்டன் யுவராஜ் சிங் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணியின் துவக்க வீரர்கள் ஜெஸ்ஸி ரைடர் மற்றும் பைனே ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. புனே அணி 16 ரன்களை எடுத்திருந்தபோது அதிரடி வீரர் ஜெஸ்ஸி ரைடர் 12 ரன்கள் எடுத்த நிலையில் அஹமதின் பந்துவீச்சில் சச்சினிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து மன்ஹாஸ் களமிறங்கினார். மன்ஹாஸ் ரன் எதுவும் எடுக்காத நிலையில் அஹமதின் அதே ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ஒரே ஓவரில் புனே அணி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அடுத்ததாக ராபின் உத்தப்பா களமிறங்கினார். அடுத்த ஓவரை முனாப் பட்டேல் வீசினார். இவரது பந்தில் பீட் ஆன பைனே கிளீன் போல்டு முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது புனே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் களமிறங்கிய அணியின் கேப்டன் யுவராஜ் சரிவை தடுத்து நிறுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரும் முனாப் பட்டேலின் அதே ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட் கீப்பர் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 4 வது மற்றும் 5 வது ஓவர்களில் புனே அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் மிஸ்ரா, உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 8.3 ஓவர்களில் 52 ஆக இருந்தபோது 12 ரன்களை எடுத்திருந்த மிஸ்ரா, மொர்டாசாவின் பந்தில் சர்மா கேட்ச் பிடிக்க அவுட்டானார். அடுத்து முரளி கார்த்திக், உத்தப்பா ஜோடி சேர்ந்து ரன் எண்ணிக்கையை நகர்த்திக்கொண்டு சென்றது. 87 ரன்களை புனே அணி தொட்டபோது, 11 ரன்களை எடுத்திருந்த கார்த்திக், மலிங்காவின் பந்தில் சைமண்ட்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அணி 98 ரன்களை அடைந்தபோது அதுவரை தாக்குப்பிடித்து 45 ரன்களை அடித்த உத்தப்பா, மொர்டாசாவின் பந்தில் பொல்லார்டு பிடித்த ஒரு அற்புதமான டைவிங் கேட்சால் அவுட்டாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் புனே அணியின் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்ததால் 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் முனாப் பட்டேல் மிக சிக்கனமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், அஹமது, மொர்டாசா, மலிங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பிரான்ங்ளின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ். துவக்க ஆட்டக்காரர்களாக பிரான்க்ளின் மற்றும் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் பிரான்க்ளின் 6 ரன்களே எடுத்த நிலையில் வாஹ் பந்தில் மன்ஹாசால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதையடுத்து அம்பதி ராயுடு துவக்க வீரர் சச்சினுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் மிக நிதானமாக ரன்களை சேர்த்தனர். இவர்களின் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிக்கு அருகாமையில் கொண்டுசென்றது. இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 83 ஐ எட்டியபோது 35 ரன்களை எடுத்திருந்த சச்சின், சர்மாவின் பந்தில் தாமசால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக ரோகித் சர்மா களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 89 க்கு சென்றபோது அம்பதி ராயுடுவும் 37 ரன்கள் எடுத்த நிலையில் தாமசின் பந்தில் சர்மாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதையடுத்து அதிரடி வீரர் சைமண்ட்ஸ், சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இவர்களும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இதனால் வெற்றி இலக்கை நெருங்கியது மும்பை இந்தியன்ஸ். இறுதி ஓவர் பரபரப்பான நிலையை எட்டியது. அந்த ஓவரை முரளி கார்த்திக் வீசினார். இந்த ஓவரில் கடைசி 2 பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஒரு ரன் எடுக்க மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஓடினர். கார்த்திக் பந்தை சரியாக சேகரிக்காமல் விட்டதால் அந்த ரன் எடுக்கப்பட்டது. ரன் அவுட் ஆகாமல் சைமண்ட்ஸ் தப்பினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 118 ரன்களை எடுத்தது. கடைசி பந்தை சந்தித்த ரோகித் சர்மா அந்த பந்தை சிக்ஸருக்கு தூக்கினார். இதனால் கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மும்பை தரப்பில் சைமண்ட்ஸ் ஆட்டமிழக்காமல் 16 ரன்களையும், சர்மா 20 ரன்களையும் பெற்றனர். புனே தரப்பில் தாமஸ், வாஹ், சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை வீரர் முனாப் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் 3 ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு