முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஏப். 27 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை தோற்கடித்து முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் சென்னை அணி தரப்பில், துவக்க வீரராக இறங்கி ய மைக் ஹஸ்சே அரை சதம் அடித்து அணிக்கு சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். விஜய், மற்றும் தோனி இருவரும் அவருக்கு ப் பக்க பலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, வேகப் பந்து வீச்சாளரான மார்கெல் அபாரமாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ் வின் மற்றும் பொலிஞ்சர் இருவரும் அவருக்கு ஆதரவாக பந்து வீசி னர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மை தானத்தில் 29 - வது லீக் ஆட்டம் நடந்தது. இதில், கேப்டன் யுவராஜ் சிங் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும், கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. 

முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற புனே வாரிய ர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சென்னை கிங்ஸ் அணி தரப்பி ல், முரளி விஜய் மற்றும் மைக் ஹஸ்சே இருவரும் ஆட்டத்தை துவக்கி னர். 

சென்னை அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் டை இழந்து 142 ரன்னை எடுத்தது. அந்த அணி தரப்பில், ஒரு வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

சென்னை அணியின் துவக்க வீரரான மைக் ஹஸ்சே அதிகபட்சமாக 48 பந்தில் 61 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக் கம். இறுதியில் அவர், டெய்லர் வீசிய பந்தில் பாண்டேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

முரளி விஜய் 29 பந்தில் 31 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்று ம் 1 சிக்சர் அடக்கம். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்னைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தவிர, கேப்டன் தோனி 21 பந் தில் 26 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக் கம். 

புனே வாரியர்ஸ் அணி சார்பில், முன்னணி பெளலரான டெய்லர் 30 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தாமஸ் 29 ரன்னைக் கொடு த்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ரோகித் சர்மா 1 விக்கெட் எடுத்தார். 

புனே அணி 143 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங் கிய அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்னை எடுத் தது. 

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கியமான இந்த லீக் ஆட்டத்தில் 25 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த 3 ஆட்டத்தில் தோல்விக்குப் பின்பு அந்த அணிக்கு கிடைத்த வெற்றி இது வாகும். 

புனே வாரியர்ஸ் அணி தரப்பில், கேப்டன் யுவராஜ் சிங் அதிகபட்ச மாக, 43 பந்தில் 34 ரன்னை எடுத்தார். மன்ஹாஸ் 23 பந்தில் 20 ரன் னை எடுத்தார். தவிர, ரைடர் மற்றும் எல். மெக்குல்லம் இருவரும் தலா 15 ரன்னையும், பாண்டே 12 ரன்னையும் எடுத்தனர். 

சென்னை அணி சார்பில், அல்பி மார்கெல் 29 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். பொலிஞ்சர் மற்றும் அஸ்வின் இருவரும் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மைக் ஹஸ்சே தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்